கோவை, மார்ச் 8: கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம், சொக்கம்புதூர், பாப்பநாயக்கன்பாளையம், நஞ்சுண்டாபுரம் பீளமேடு, உப்பிலிபாளையம் உட்பட 80 இடத்தில் மயானம், சுடுகாடு உள்ளது. இந்த மயானம், சுடுகாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை. சடலத்தை அடக்கம் செய்ய வருபவர்கள், முட்புதர்களை வெட்டி அகற்றி குழி தோண்ட படாதபாடு பட வேண்டி உள்ளது. மாநகராட்சி சுடுகாடு, மயானங்களை ஆண்டிற்கு இரு முறை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டாக எந்த மயானமும் சீரமைக்கப்படவில்லை. தினமும் 6 முதல் 10 சடலம் அடக்கம் செய்யப்படும் ஆத்துப்பாலம் மாநகராட்சி மயானத்தின் பெரும்பகுதியில் முட்புதர் படர்ந்து காணப்படுகிறது. பாம்பு, தேள் உள்ள இந்த வளாகத்தில் புதர் மண்டியதால் சடலம் அடக்கம் செய்ய இடம் கிடைக்காத நிலையிருக்கிறது.