கோவை, மார்ச் 8: கோவை மாவட்டத்தில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 56,079ஆக உயர்ந்தது. மேலும், நேற்று 55 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 55,037ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ, தனியார் மருத்துவமனைகளில் 358 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 684ஆக