பெண் தீக்குளித்து தற்காலை

ஈரோடு, மார்ச் 8: ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் பாலாஜி மனைவி அன்புகனி(45). இவர் மகள், மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, அன்புகனி முதல் கணவரை பிரிந்து பென்னி என்பவருடன் வாழ்ந்து வந்தார்.  இந்நிலையில், மகளும், மருமகனும் அன்புகனியிடம் பேசாமல், வீட்டிற்கு வராமல் இருந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை  உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: