கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பெருந்துறை, மார்ச் 8: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் சீரமைப்பு பணியில், இந்த கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய்களில் 934 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதற்கான திட்டபணிகளை கடந்த மாதம் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகே நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: