சத்தியமங்கலம், மார்ச் 8: ஆசனூர் மலைப்பகுதியில் இருந்து மஞ்சள் மூட்டைகள் பாரம் ஏற்றிய மினிலாரி வெள்ளகோவில் செல்வதற்காக நேற்று மாலை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஈரோடு அடுத்த அவல்பூந்துறையைச் சேர்ந்த டிரைவர் சரவணன் (30) என்பவர் ஓட்டினார். லாரி உரிமையாளர் தேவராஜ் (56) உடனிருந்தார். மினி லாரி 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 150 அடி பள்ளத்தில் உருண்டோடி கவிழ்ந்தது.