×

கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

திருச்சி, மார்ச் 7: சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்(46). இதே பகுதியை சேர்ந்தவர் இளவேந்தன். இருவரும் திருச்சியில் தங்கி தனியார் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று பணியிலிருந்தபோது மகேஷ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை இளவேந்தன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து இளவேந்தன் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு