பங்குனி பிரம்மோற்சவ 3ம் நாள் விழா மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பெருமாள் ராஜஅலங்காரத்தில் சேவை

மன்னார்குடி, மார்ச். 7: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 3 ம் நாளான நேற்று பெருமாள் ராஜஅலங்காரத் தில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழகத்தில் புகழ் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபால சுவாமி கோயிலில் 18 நாள் பங்குனி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 3 ம் நாளான நேற்று உற்சவர் பெருமாள் பல்லக்கு சேவையில் கோயிலிருந்து புறப்பட்டு நான்கு வெளி ராஜ வீதிகளின் வழியாக யானை கால் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், பெருமாள் ராஜஅலங்காரத்தில் வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: