கலெக்டருக்கு கோரிக்கை மீனவரை பிடித்து விசாரணை எதிரொலி காவல் நிலையத்தை மீனவர்கள் முற்றுகை

முத்துப்பேட்டை, மார்ச்7:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கபூர் மகன் மீனவர் தவுபீக்(25) இவர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சக மீனவர்களுடன் படகில் செல்ல ஆசாத்நகர் கோரையாறு பாலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த போலீசார் தவுபீகை காவல் நிலையம் அழைத்து கொண்டுவந்து அவரிடம் விசாரணை செய்தும் கைரேகைகளை பதிவு செய்தும் விடுவித்துள்ளனர். இந்தநிலையில் மீனவர் தவுபீகை நீண்ட நேரம் ஆகியும் காணாத சக மீனவர்கள் காவல் நிலையம் நோக்கி வந்தபோது எதிரே மீனவர் தவுபீக் வந்துள்ளார். அப்பொழுது நடந்த விபரத்தை அவர் சக மீனவர்களிடம் கூறியுள்ளார்.. இதனை கேட்டறிந்த மீனவர்கள் அதன் பின்னர் காலதாமதமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த ஆசாத்நகர் மீனவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை நியாயம் கேட்டு முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த போலீசாரிடம் எப்படி எங்கள் மீனவரை அழைத்து சென்று கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினீர்கள்? என்று கேட்டனர;. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்தின்பேரில் தான் தவுபீகை அழைத்து வந்ததாவும் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்றனர். இதனையடுத்து சமாதானம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: