முத்துப்பேட்டை, மார்ச்7:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கபூர் மகன் மீனவர் தவுபீக்(25) இவர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சக மீனவர்களுடன் படகில் செல்ல ஆசாத்நகர் கோரையாறு பாலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த போலீசார் தவுபீகை காவல் நிலையம் அழைத்து கொண்டுவந்து அவரிடம் விசாரணை செய்தும் கைரேகைகளை பதிவு செய்தும் விடுவித்துள்ளனர். இந்தநிலையில் மீனவர் தவுபீகை நீண்ட நேரம் ஆகியும் காணாத சக மீனவர்கள் காவல் நிலையம் நோக்கி வந்தபோது எதிரே மீனவர் தவுபீக் வந்துள்ளார். அப்பொழுது நடந்த விபரத்தை அவர் சக மீனவர்களிடம் கூறியுள்ளார்.. இதனை கேட்டறிந்த மீனவர்கள் அதன் பின்னர் காலதாமதமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.