திருத்துறைப்பூண்டி, மார்ச் 7: திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் கலெக்டருக்கு அனுப்புயுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது. திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சாலைகள் அகலமாக இல்லை.குறிப்பாக ரயிலடி, சாலை மேலவீதி, கடைத்தெரு, சன்னதி தெரு ஆகியவற்றில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி விடுகின்றனர். பவ ஔஷதீஸ்வரர் சுவாமி கோயில் உள்ள சன்னதி தெருவில் கடைத்தெருவில் உள்ள அனைத்து வாகனங்களும் நிறுத்த ப்படுகின்றன.நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் வரைமுறை இல்லாமல் நிறுத்தப்படுவதால் பக்தர்களும் பொதுமக்களும் நடந்து கூட கோயிலுக்கு செல்ல இயலாமல்தடுமாற வேண்டிய நிலை உள்ளது.