கலெக்டர் அறிவுறுத்தல் சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து

க.பரமத்தி, மார்ச்7: தென்னிலை அருகே கூனம்பட்டி பிரிவு பகுதியில் சாலையோர பள்ளத்தில் பைக் இறங்கிய விபத்தில் இருவர் காயமடைந்தனர். கரூர் அடுத்துள்ள புலியூர் அருகேயுள்ள அமராவதி நகரை சேர்ந்தவர்கள் ரங்கசாமி மகன் சந்தோஷ்குமார்(22), இவரும் சரவணன் மகன் ரவிசந்திரன் (21) ஆகிய இருவரும் சொந்த வேலையாக பைக்கில் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளனர்.பைக்கை சந்தோஷ்குமார் ஓட்டியுள்ளார்.

கூனம்பட்டி பிரிவு வந்தபோது பைக் எதிர்பாராதவிதமாக சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் சந்தோஷ்குமாருக்கு படுகாயமும், ரவிச்சந்திரனுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: