க.பரமத்தி அருகே விபத்து பைக் மீது மினிவேன் மோதல்

க.பரமத்தி, மார்ச்.7: க.பரமத்தி அருகே பைக் மீது மினிவேன் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் இறந்தார். க.பரமத்தி அடுத்துள்ள தென்னிலை அருகே வாழநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கவுதம்(25). இவர் சொந்த வேலையாக வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளார். தென்னிலையில் இருந்து சின்னதாராபுரம் நோக்கி வந்தபோது எதிரே வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தவரை பார்த்த இவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விபத்து குறித்துதென்னிலை எஸ்ஐ ரங்கநாதன், சடையப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: