கரூர், மார்ச். 7: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக காவல்துறையினர்களிடம் இருந்து பெறப்பட்ட நான்கு தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 65 இடங்களுக்கான பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கரூர் டவுன் காவல் நிலையத்துக்குட்பட்ட கரூர் தாலுகா அலுவலகம் என்ற இடம் கரூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகம் முன்பாக உள்ள இடமாக உள்ளது என்பதாலும், தேர்தல் தொடர்பான பரப்புரை மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் பட்சத்தில் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதாலும், சுவிதா ஸ்போர்சல் இணையதளத்தில் கரூர் டவுன் காவல் நிலையத்திற்குட்பட்ட கரூர் தாலுகா அலுவலகம் என்ற இடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.