திருப்பூர், மார்ச். 7: சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் நேற்று மாநகராட்சியினரால் வெட்டி அகற்றப்பட்டது. திருப்பூர் கே.எஸ்.சி. பள்ளி சாலையில் 45 ஆண்டு பழமையான பூவரசு மரம் இருந்தது. இந்நிலையில் அந்த சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிக்காக நேற்று பழமையான பூவரசு மரம் பொக்லைன் இயந்திரம் மூலம் வெட்டி சாய்க்கப்பட்டது. தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் மரங்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. பழமையான மரத்தை மாநகராட்சி அகற்றியது சமூக ஆர்வலர்கள் பலரையும் கவலையடைய செய்துள்ளது.