திண்டுக்கல், மார்ச் 7: திண்டுக்கல்லில் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்த பெண் போலீஸ் சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்பி ரவளிபிரியா தலைமை வகித்தார். டிஐஜி முத்துச்சாமி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், பெண்களுக்குக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். பெண்கள் வலிமையானவர்கள் அன்பால் எல்லாவற்றையும் வெல்வார்கள். பெண்கள் என்றாலே தியாகம் தான். எவர் சாதிக்கின்றார்களோ, அவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். குழந்தைகள் நல்ல விதமாய் வளர்க்கப்படுவது எனஅனைத்திற்கும் பின்னால் அவர்களின் பங்கு உண்டு என வாழ்த்தினார்.