வேடசந்தூரில் திமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
வேடசந்தூர், மார்ச் 7: வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் விரா.எஸ்.டி.சாமிநாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், துணைச் செயலாளர் நாகப்பன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விராக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஒன்றிய செயலாளர் சாமிநாதன், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதிவு தபால் வழங்கப்பட்டு உள்ளது. அந்த பணியில் அலுவலர்கள் முறையாக செயல்படுத்துகிறார்களா என களப்பணியை உடனிருந்து செயல்படுத்தவேண்டும்