கழுத்தை நெரித்த தடத்துடன் ஆற்றிலிருந்து இளைஞர் உடலை போலீசார் மீட்பு

பெரியகுளம், மார்ச் 7:  பெரியகுளம் தென்கரை வராக நதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் நீரில் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை மீட்டனர்.  இதனை அடுத்து இளைஞரின் சட்டை பையில் சோதனை செய்த போது அவரின் ஓட்டுனர் உரிமத்தை வைத்து அவர் போடியை  சேர்ந்த பாலசுப்பிரமணியம் என தெரியவந்தது. இதனிடையே நீரில் மூழ்கிய இளைஞரின் கழுத்து பகுதியில் கயிற்றால் இறுக்கி கழுத்தை நெரித்த தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இளைஞரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என பெரியகுளம் தென்கரை காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: