மாசித்திருவிழாவை முன்னிட்டு பழநியில் ஒருங்கிணைந்த வர்த்தக சங்கம் அன்னதானம்

பழநி, மார்ச் 7: மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநியில் ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி டவுன், கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி ஒருங்கிணைந்த வர்த்தகர் சங்கம் மற்றும் அடிவாரம் சரவணப்பொய்கை வர்த்தகர் சங்கங்களின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ஒருங்கிணைந்த வர்த்தகர் சங்கங்களின் மாநில துணைத்தலைவர் தொழிலதிபர் சரவணன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: