நத்தம் அருகே வாகனச்சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்

நத்தம், மார்ச் 7: நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில், டூவீலரில் கொண்டு சென்ற ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நத்தம் அருகே கோட்டையூர் பகுதியில் தேர்தல் அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வேகமாக வந்த டூவீலரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் டூவீலரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், மருங்காபுரியை சேர்ந்த தமிழரசன், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. அவரிடமிருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: