தேனி, பெரியகுளத்தில் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச் 7:  வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தேனியில் விவசாய சங்கத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  தேனி நகர் பழைய பஸ்நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இப்போராட்டத்திற்கு  விவசாய சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், எஸ்யுசிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் சுருளியாண்டவர், மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம்

டெல்லியில் 100 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராத மத்திய அரசை கண்டித்து பெரியகுளத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி கோஷமிட்டனர்.

Related Stories: