பெண்ணிடம் செயின் பறிப்பு

தேனி, மார்ச். 7 : தேனியில் நேற்று முன்தினம் இரவு பழக்கடைக்கு சென்ற பெண்ணின் கழுத்தில்  அணிந்திருந்த தங்க செயினை டூவீலரில் வந்த வாலிபர்கள் பறித்துச் சென்றனர். தேனி கேஆர்ஆர் நகரில் குடியிருப்பவர் அருணாச்சலம் மனைவி ராமுத்தாய்(65). இவர் நேற்றுமுன்தினம் பழம் வாங்க சென்றார் அப்போது டூவீலரில்வந்த இரண்டு வாலிபர்கள், ராமுத்தாய் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால் ராமுத்தாய் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசி காமிராக்களின் பதிவுகள் மூலம் செயின் பறிப்பு திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: