சிங்கம்புணரி எஸ்.புதூரில் ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல்

சிங்கம்புணரி, மார்ச் 7:  சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தேர்தல் நடந்தது. ஆணையாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ், துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தனர். இதில் வட்டார தலைவராக பிராங்கிளின், செயலாளராக சண்முகம், பொருளாளராக முத்துலட்சுமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.புதூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வகைப்படுத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும், ஆசிரியர் அலுவலர் குடியிருப்பு கட்டித்தர வேண்டும், வட்டார கல்வி அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில துணை தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: