மதுபான புகார் தெரிவிக்க செல் எண் அறிவிப்பு

சிவகங்கை, மார்ச் 7: சிவகங்கை மாவட்டத்தில் மதுபானம் தொடர்பான புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபானம் சில்லரை விற்பனை கடைகளில் அளவுக்கு அதிகமாக விற்பனையாதல், சட்டவிரோதமான மதுபானங்கள் விற்பனை உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம். மதுபானம் தொடர்பான தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை கண்காணிக்க டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லறை விற்பனை) வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரிடம் 9944859895 என்ற செல் எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: