திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஏராளமானோர் பங்கேற்பு

திருப்புத்தூர், மார்ச் 7:   திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்புத்தூரில் உள்ளது சிவகாசி உடனாய திருத்தளிநாதர், யோக பைரவர் கோயில். இங்கு நேற்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்களால் நடந்தன. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்ததும் பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணிக்காய், தேங்காய்களில் விளக்கேற்றியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

Related Stories: