- தவேகா எம்.எல்.ஏ.
- வாடிப்பட்டி
- தவெகா
- சட்டமன்ற உறுப்பினர்
- கருப்பையா
- இந்திரா நகர்
- வாடிப்பட்டி ஊராட்சி, மதுரை மாவட்டம்
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்கவும், ஆய்வுக்காகவும் ஆதரவாளர்களுடன் தவெக எம்எல்ஏ கருப்பையா சென்றார். அப்போது அப்பகுதி மக்கள், ‘‘கழிவுநீர் வாய்க்கால், பொதுக் கழிப்பிடம், சாலை மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.
இதுகுறித்து வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரில் முறையிட்டபோது, என் வீட்டு முன்பே கழிவுநீர் தேங்கியுள்ளது. நான் என்ன செய்ய முடியும்’ என்று அலட்சியமாகப் பதில் அளித்தார்’’ என்றனர்.
இதனால் ஆவேசமடைந்த எம்எல்ஏ கருப்பையா, ‘‘அவரை மருந்து (விஷம்) குடித்துச் சாகச் சொல்லுங்க’’ என்று கூறினார், அதையும் அவரது ஆதரவாளர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

