சென்னை: ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் 5 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பட்டாக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள தயார் செங்கோட்டையன். நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை எதிர்கொள்ள ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
