6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாமக்கல், மார்ச் 7: நாமக்கல் அடுத்த நடுப்பட்டியை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ரவி (47). இவர் அதே பகுதியை சேர்ந்த 1ம் வகுப்பு படிக்கும் 6வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமி தனது பாட்டியிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து நல்லிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்த போலீசார், ரவியை நேற்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: