பெத்ததாளாப்பள்ளியில் மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி, மார்ச் 7: கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில், சுயம்பு மண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு பூ அலங்காரம், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மதியம் 3 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும், கரகம் மற்றும் மண்டு மாரியம்மன் சிலை எடுத்து ஊர்வலமாக, ராயக்கோட்டை சாலையில் இருந்து மண்டு மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்னர், அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இரவு 7 மணிக்கு நாட்டியாலயா நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு வானவேடிக்கையும் நடந்தது. இன்று (7ம்தேதி) சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெத்ததாளாப்பள்ளி, காமராஜ் நகர் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: