காரில் எடுத்துச் சென்ற ₹1.50 லட்சம் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 7:  தளி அருகே மதகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு, தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திகேயன், எஸ்எஸ்ஐ சிவக்குமார், மணிமேகலை ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓசூரிலிருந்து வந்த தனசேகர் (60) என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்ததில், எவ்வித ஆவணமும் இன்றி ₹1.50 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படையினர் பணத்தை  பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை தாசில்தார் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: