×

மகளிர் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம்

அரூர், மார்ச் 7: அரூர் அடுத்த இ.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பிரதான் மந்திர் பாரதிய ஜன்ஹவுஷாதி பரியோஜனா சார்பில், மகளிர் சுகாதாரம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ், துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சக்தி தலைமை தங்கினார். அரூர் ஜே.கே.பி குழும இயக்குனர் ஜெயகவிதா பாரதி, நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். தமிழ்த்துறை தலைவர் ரோபினா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் சுரபி, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். முகாமில் அனைத்து துறைத்தலைவர்கள், சுகாதார மேற்பார்வையாளர் சாதிக்பாஷா, நிர்வாக அலுவலர் அருள்குமார், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் பத்மாவதி, பேராசிரியர்கள், செவிலியர், மருந்தாளுனர் பயிற்சி பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வணிகவியல் துறைத்தலைவர் மணி நன்றி கூறினார்.  

Tags : 's Health ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா