தாம்பரம் அருகே ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த ரூ.81 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீபெருமந்தூர் தனி தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் போலிசார் தாம்பரம் அருகே எருமையூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஆவணங்களின்றி ரூ.81 ஆயிரம் இருந்தது. விசாரணையில், தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (57). இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: