திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி மது விற்பனை மற்றும் மது கடத்தலை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 16வது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை மற்றும் மது கடத்தல் போன்றவற்றினை தடுத்திடவும், அரசு மதுபான கடைகளில் விற்பனையை கண்காணிக்கவும் மேலும் இது தொடர்பாக வரும் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் தாசில்தார் அந்தஸ்தில் இருந்து வரும் 2 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.