பேராவூரணி, மார்ச் 6: பேராவூரணி கடைவீதியில் முக்கிய சாலைகளில் பரவலாக கிடந்த மணலை தினகரன் செய்தி எதிரொலியாக, பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. பேராவூரணி கடைவீதி, சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் பரவலாக கிடக்கும் மணலால் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. மேலும், வாகனங்களில் செல்வோர் சறுக்கி கீழேவிழுந்து விபத்துகள் ஏற்படுவது, போன்ற செயல்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர். இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.