×

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

வேலூர், மார்ச் 6: வேலூர் அடுத்த அரியூர் குப்பம் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் பாபு மகன் அஜீத்(25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே சென்றபோது அதில் தவறி விழுந்ததாக தெரிகிறது. தண்ணீரில் தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினார். சம்பவம் குறித்து அறிந்ததும் வேலூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரியூர் போலீசார் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி அஜீத்தை சடலமாக மீட்டனர்.
இதுதொடர்பாக அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்