களக்காட்டில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு

களக்காடு, மார்ச் 6: களக்காட்டில் வீட்டுக்குள் புகுந்த  பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். களக்காடு கோவில்பத்து வடக்குத் தெருவை சேர்ந்தவர் பழனி மனைவி பார்வதி அம்மாள்(55). இவரது வீட்டிற்குள் நேற்று 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து  அவர் களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் படி, வனசரகர் பாலாஜி ஆலோசனையின் பேரில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Related Stories: