காவிரியில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு

இடைப்பாடி, மார்ச் 6: திருச்சி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன்(20) என்பவர், நண்பர்கள் 4 பேருடன் இடைப்பாடியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர், நேற்று முன்தினம் மாலை, தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரவீன் தண்ணீரில் மூழ்கினார். அவரை தேவூர் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, பிரேதப் பரிசோதனைக்கு பின்பு பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: