போக்சோவில் கைது

திருப்புவனம், மார்ச் 6: பூவந்தி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் முனிச்சாமி (39). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த 12 வயது சிறுமி அங்கு மேய்ந்து கொண்டிருந்த தனது மாட்டை பிடித்து போக வந்துள்ளார். சிறுமியை கண்ட முனிச்சாமி, அவரிடம் நைசாக பேசி பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பூவந்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முனிச்சாமியை கைது செய்தனர்.

Related Stories: