×

விபத்தில் மெக்கானிக் பலி

காடையாம்பட்டி அருகே டூவீலர் மீது லாரி மோதி மெக்கானிக் உயிரிழந்தார். மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை சுமார் 10 கி.மீ., துரத்திச்சென்று மக்கள் மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கந்தன்சேவிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் நவீன்குமார்(24). டூவீலர் மெக்கானிக்கான இவர், பழைய சினிமா கொட்டாய் என்னுமிடத்தில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை வீட்டிலிருந்து பூசாரிப்பட்டி வழியாக கடைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி, எதிர்பாராத விதமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். டூவீலர் மீதுமோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் சுமார் 10 கி.மீ., தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த சின்னப்பரெட்டி(26) என்பதும், திருப்பூரில் வெங்காயம் இறக்கி விட்டு திரும்பிச் செல்லும் வழியில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்

Tags :
× RELATED 21ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்