திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

காரைக்குடி, மார்ச் 6:  காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் பாலமுருகன் வரவேற்க, செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். யோசி குழுமத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் காலமேலாண்மை, இலக்கை நிர்ணயித்தல் உள்ள பல்வேறு பயிற்சி அளித்தனர். முதலாமாண்டு துறை தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.

Related Stories: