சோனா கல்லூரியில் எம்.பி.ஏ துறை சார்பில் “சோனா பஜார்”

சேலம், மார்ச் 6: சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. துறை சார்பில், “சோனா பஜார்” என்ற நடைபெற்றது. நிகழ்ச்சியை சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, முதல்வர் செந்தில்குமார், டீன் அகிலாண்டேஸ்வரி, எம்.பி.ஏ. துறை துணை இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்து, அனைத்து விற்பனையகத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா பேசுகையில், ‘தற்போது உள்ள சூழலில் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கமாக, ஒரு பொருளை எவ்வாறு சந்தைக்கு கொண்டு வருதல், விளம்பரப்படுத்துதல், வாடிக்கையாளர் தேவையை புரிதல், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை அளித்தல் போன்ற திறன்களை கற்பிக்கும் விதமாக எம்.பி.ஏ. பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றார். சோனா தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரபாதேவி, ரமேஷ்குமார், ஜோதிபிரான்சினா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: