ஊத்தங்கரையில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஊத்தங்கரை, மார்ச் 6:ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.

ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன், பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமை வகித்தனர். இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குமரன், முத்தமிழ்செல்வன், முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கொடி அணிவகுப்பு சேலம் மெயின் ரோட்டில் தொடங்கி அண்ணாசிலை சந்திப்பு வழியாக சென்று, ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் முடிவுற்றது. இந்த கொடி அணிவகுப்பில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர், சாமல்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரும் பங்கேற்றனர்.

Related Stories: