அரூர், மார்ச் 6: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அரூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று 300 போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், உரிய பாதுகாப்பு வழங்குவதை உணர்த்தும் வகையிலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு கச்சேரிமேட்டில் தொடங்கி பேருந்து நிலையம், கடைவீதி, பாட்சாபேட்டை, பைபாஸ் சாலை வழியாக சென்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ முத்தையா, ஏடிஎஸ்பி புஷ்பராஜ், டிஎஸ்பி தமிழ்மணி, இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, ரவி, சிவசங்கரன், மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.