×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

பாப்பிரெட்டிப்பட்டி,மார்ச் 6:  பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகேயுள்ள வாசிகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன்(35), விவசாயி. இவருக்கு சரளா(30) என்ற மனைவியும், சந்தியா(7) என்ற மகளும், நித்திஷ்(4) என்ற மகனும் உள்ளனர். சென்னகிருஷ்ணனின் தந்தை, பழனி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அவரை பார்ப்பதற்காக சரளா மற்றும் குழந்தைகள் நேற்று முன்தினம் மதியம் சென்றுள்ளனர். பின்னர் திரும்பும் போது, வழியில் இருந்த விவசாய கிணற்றில் நித்திஷ் தவறி விழுந்துள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரளா மற்றும் சந்தியா, அவனை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மூவரையும் மீட்டனர். இதில், சிறுவன் நித்திஷ் பரிதாபமாக உயிரிழந்தான். காயமடைந்த சரளா, சந்தியாவை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Papirettipatti ,
× RELATED தீரன் சின்னமலை சிலைக்கு மாலை