திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

தர்மபுரி, மார்ச் 6: தர்மபுரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தர்மபுரி நகரம், மேற்கு ஒன்றியம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, எச்சனஅள்ளி சண்முகம், அதியமான்கோட்டை சண்முகம், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், திமுக நிர்வாகிகள் முல்லைவேந்தன், வெல்டிங் ராஜா, ரஜினி ரவி, பொன்.மகேஸ்வரன், ரகீம், தொண்டரனி ராஜா, மாங்கனி செல்வராஜ், லட்சுமணன், தென்னரசு, வெங்கடேஸ், பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பசுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ பேசுகையில், ‘தர்மபுரி சட்டமன்ற தொகுதியில், தலைவர் யாரை நிறுத்தினாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் இறுதிவரை இருந்து படிவம் எண்-17 முழுமையாக பூர்த்தி செய்து பெற வேண்டும்,’ என்றார்.

Related Stories: