கடத்தூர் அருகே மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கடத்தூர், மார்ச் 6: கடத்தூர் அருகே டி.ஐயம்பட்டி தேசத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி பால்குட மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் கோயில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டா பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: