சிதம்பரம், மார்ச் 6: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் சிக்கி தவிப்பதால் பல்கலைக்கழகத்தை தனிச்சட்டம் இயற்றி தமிழக அரசு ஏற்றது. பின்னர் இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி நிரவல் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.அந்த வகையில் பல்கலை கழகத்தில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், இளநிலை தொழில்நுட்ப அலுவலர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட 179 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நிரவல் செய்யப்பட்டு அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் பணி நிரவலில் சென்ற இடங்களில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொறுப்புகளில் நியமிக்கப்படாமல் பல்வேறு பொறுப்புகளில் பணி அமர்த்தப்பட்டனர். இது குறித்து அந்த ஊழியர்கள் ஏற்கனவே சிதம்பரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.