×

தேர்தல் நடத்தை விதி அடிப்படையில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு

திருப்பூர், மார்ச் 6: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் திருப்பூரில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைத்து வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வளர்மதி அருகில் உள்ள எம்.ஜிஆர் சிலை, ரயில் நிலையம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா, பெரியார் சிலைகளை மாநகராட்சியி ஊழியர்கள் துணி போர்த்தி மறைந்தனர். மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே எழுத்தப்பட்டுள்ள அரசியல் சார்ந்த சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை இந்த நடைமுறைகள் தொடரும் என மாநகராட்சியினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா