விவசாயி பலி

ஒட்டன்சத்திரம், மார்ச் 6: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பொருளூர் வெறுவாடிநாயக்கர் வலசை சேர்ந்தவர் துரைசாமி (52). இவர், நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் இருந்த கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில், துரைசாமி கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான தீயணைப்புத் துறையினர், கிணற்றில் கிடந்த துரைசாமி உடலை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிகின்றனர்.

Related Stories: