வத்தலக்குண்டு, மார்ச் 6: வத்தலக்குண்டுவில் காளியம்மன் கோவில் அருகே மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பாக பொதுத்துறை மற்றும் நிதித்துறை பாதுகாப்பு மக்கள் சந்திப்பு கருத்தரங்கம் நடந்தது. வத்தலக்குண்டு எல்ஐசி கிளை ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் நாகபாண்டி வரவேற்றார். மதுரை கோட்ட ஐசிஇயு துணைத்தலைவர் வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார். வத்தலக்குண்டு கிளை மேலாளர் வழிவிட்டாள், வத்தலகுண்டு கிளைமுகவர் சங்க செயலாளர் பரமசிவம், கிளை வளர்ச்சி அதிகாரி சங்க செயலாளர் தன்ராஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் அருண் பிரசாத், அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணி மாவட்ட இணைச்செயலாளர் ரகுபதி, வத்தலக்குண்டு சிஐடியு ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் குணசீலன், டிஎன்ஜிஇஏ நிலக்கோட்டை வட்ட தலைவர் முருகேசன், வத்தலகுண்டு முகவர் சங்க தலைவர் துரைராஜ் உள்பட பலர் பேசினர். ஐசிஇயு திண்டுக்கல் கிளைச்செயலாளர் தங்கவேலு நன்றி கூறினார்.