கோவை, மார்ச் 6: கோவை தடாகம் சாலை உள்ள டி.வி.எஸ். நகர் பகுதியில் பத்தாண்டு காலமாக குறுந்தொழில் நடத்தி வரும் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தொழிற்கூடத்தை சேதப்படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு, குறு தொழில்முனைவோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது குறித்து கோவை குறுந்தொழில் அமைப்பான டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால் தொழில்முனைவோர்கள் பாதிக்கப்பட்டு தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இதனிடையே, தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ். நகர் பகுதியில் 10 ஆண்டுகளாக குறுந்தொழில் நடத்தி வரும் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் ஒன்று உள்ளது. இது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கட்டிட உரிமையாளர் தரப்பில் உள்ள பிரச்னை காரணமாக கட்டிடத்தில் உள்ள தொழிற்கூடங்களை மூட சொல்லி ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, வழக்கும் கோர்ட்டில் உள்ளது.