×

வாக்குச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு கவச உடை

ஈரோடு, மார்ச் 6: ஒவ்வொரு வாக்குசாவடியிலும் கொரோனா பாதுகாப்பு கவச உடை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  சட்ட மன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் தபால் ஓட்டு படிவங்களை பெற்று வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, வாக்குப்பதிவு நாளில் கடைசி 1 மணி நேரம் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வசதியாகவும், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கவும் கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபி கிட்) ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் குறிப்பிட்ட அளவில் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா அறிகுறி அல்லது கொரோனா தொற்று இருப்பவர்கள் வாக்குச்சாவடி அலுவலரிடமிருந்து பாதுகாப்பு கவச உடை பெற்று அதை அணிந்து வந்து வாக்களிக்கலாம். மேலும், வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு